தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது.


கொரானா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவதால், ஒவ்வொருவரும் முகக்கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் என ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு வந்து விட்டு வெளியில் செல்பவர்கள் உடலில் இருக்கும் நோய்த் தொற்று கிருமிகளை அழிக்கும் வண்ணம், உடல் முழுவதும் கிரிமி நாசினி மருந்து படவேண்டும் என்ற நோக்கததில் மருத்துவமனை வெளிப்புற வாயிலில் கிரிமி நாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் அனைவரையும் அந்த அரங்கம் வழியாக வெளியேறும் வகையில் கண்காணிப்புக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகரத்தில் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என நான்கு இடங்களில் கிரிமி நாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டு உளளது.


" alt="" aria-hidden="true" />



Popular posts
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர்
Image
3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை
Image